About Me

My photo
பாலகிருஷ்ணன் பரமசிவம் ஆகிய நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் வாசி, சமூகத்தின் ஒரு அங்கமென்பதால் என்னைப்பற்றியும் ,எமது ஊர் பற்றியும், எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை பகிரும் தளம் என இந்த Blogspot ஐ உபயோகிக்க விரும்புகிறேன்.

Saturday, August 1, 2015

போதி மரம் -2

20 வருடங்களுக்கு முன்...
-பாலா! தங்கச்சிக்கு கல்யாணம்,அவஸியம் வரனுன்டா!
-கண்டிப்பா வாரேன்டா!கடை அன்னைக்கு லீவுதான்.
-ஆமா என்னடா தாடியும் மீசையும்!நெத்தில புதுசா நாமம் வேற!
-ம்.ம்.கொஞ்சம் ஆன்மீக ஈடுபாடு!சில விசயங்கள் உணர்ந்தேன்,சில விசயங்கள் புரியல,எனக்கு தெரிஞ்ச வகையில முயற்சி பன்றேன்!
-யாராவது குரு கிட்ட கத்துகிட்டு இருக்கியா?
-தெரியல..இதுக்கு தனியா குரு தேவையான்னு புரியல!சுத்தி நடக்கிறதை பாக்குறேன். எனக்குள்ளே விவாதிக்கிறேன்.தெளிவு ஏற்பட்டா அதை முடிவு ன்னு எடுத்துக்கிறேன்.இல்லைன்னா மேலும் தேடுறேன்.
-அப்போ நான் கர்நாடகாவுள்ள வேலை பாக்குற இடத்துல எனக்கு உயிராபத்துன்னு சுரேஸ்ட்ட சொன்னியே எப்புடி?
-ஹேய்.. அப்ப நீ உன் தங்கை கல்யாணத்துக்கு என்ன கூப்பிட வல்லையா?இத தெரிஞ்சுக்கத்தான் வந்தயா?
-இல்ல்ல்லடா.....
----தொடரும்.---- 

ஆசையில் ஓர் கடிதம்...

என் கோதைக்கு கடிதம் எழுதும் போதெல்லாம் போதை ஊற்றி எழுத வேண்டியதில்லை...பேதை அவளை நினைத்தாலே பாதை மாறும் அளவிற்கு போதை உண்டாகும்.மறக்காமல் கடிதம் எழுதி ஃபேக் ஐடியில் அனுப்பிவிட்டேன்.அப்பாடி,,மெல்லவே உறிஞ்சினேன் மனைவி வைத்துவிட்டு போன காபி-ஐ

போதி மரம் -1

-அண்ணாச்சி! சாப்டாச்சா?
-ஓ...சாப்டாச்சே!
-அப்புறம்,..வேற..
-வேறென்ன,அண்ணாச்சி! பொண்ணு ,மாப்புள புடிச்சு போச்சு,பொண்ணுக்கு பூ வைச்சாச்சு, இனி யென்ன எனக்கு உண்டான கமிசன் தான் .ரூ 4000/- கொடுத்தா வேலை முடிஞ்சுது!
-ஏய், என்னப்பா..நீ என்ன வேலை பாத்த கமிசன் கேக்குறதுக்கு?வெறும் பேப்பரு போன் நம்பர் தான...கொடுத்த...
-அப்படில்லாம் சொல்லாதீங்க அண்ணாச்சி,எனக்கு இதுதான் தொழிலு!
-சரி,.சரி ..ரெண்டு ரூபா தரச்சொல்றேன்,நாளைக்கு கடையில கணக்கு பிள்ளைகிட்ட போயி வாங்கிக்க!
-என்னங்க இப்படி சொல்ரீங்க!
-ரொம்ப வளவள-ங்காத..குடுக்கிறதை வாங்கிட்டு போ!
-சரி..நீங்க சாப்டீங்களா அண்ணாச்சி!
-எங்கயா! வந்த விருந்தாளிகளை கவனிச்சு அனுப்பவே நேரம் சரியா இருக்கு,இனிமே தான் பந்தியில போய் உட்காரனும்!
-சாப்பாடு சூப்பரா இருந்துச்சு அண்ணாச்சி!
-சும்மாவ்லே ஒரு இலை சாப்பாடு ரூ150-லெ!
-உங்களுக்கு தெரியுமா அண்ணாச்சி மேல பந்தில சாப்பிட ஆள் இல்லை! எப்படியும் 100 பேர் சாப்பாடு மிச்சமுன்னு சமையக்காரன் சொல்லுரான்,அதாவது ரூ15000- வேஸ்ட்.!
-என்ன செய்றது.. சில நேரம் எதிர்பார்த்த ஆள் வர்லைன்னா இப்படித்தான்.
-ரூ 15000-ங்கிறது என் குடும்பத்துக்கு 3 மாச செலவுங்க.!ஆனா நான் உங்ககிட்ட கேட்டது 4000/தாங்க!
-சப்.சப்.சப்!

உண்மைய சொன்னேங்க....! --3

// ஒரே ஒரு காமராஜர்தான் இருந்தார். காங்கிரஸில் அவருக்குப் பின்னர் யாரும் இன்றுவரை அவர்காட்டிய வழியில் சற்றேனும் சென்றோர் யாரும் இருந்ததில்லை, இனிமேலும் யாரும் இருக்கப் போவதற்கான அறிகுறியும் சற்றும் இல்லை.//இது ஒரு நண்பர் ரொம்ப விவரமா காமராஜரை பற்றிய பதிவில் பின்னூட்டம் இட்டிருந்தார்.
---------ஒரு சந்தேகம்!---------
ஏன்டாப்பா! காமராஜர் மாதிரி யாரும் இல்லை,யாரும் வர முடியாது அப்படினு உனக்கு எதிரில் இருக்கிறவன் எல்லாத்தையும் கை யை காட்டுறயே!
நீ ஏன்டா! நான் காமராஜர் மாதிரி வருவேன் -ன்னு உனக்கு நீயே உறுதி எடுத்துக்க மாட்டேங்கிற!?

உண்மைய சொன்னேங்க...! -2

+2 படிக்கும் போது மறைஞ்சு நின்னு தம்மடிச்சதையும்,காலேஜு மொத செமஸ்டர் முடிஞ்சவுடனே நண்பன் வற்புருத்தினானால பீர் அடிச்சு ,வாந்தி எடுத்து விழுந்து கிடந்ததையும்,வேலை கிடைச்சு மொதச்சம்பளம் வாங்கிய கையோட பீர் பப் போனதையும் வீரசாகஸமா எழுதுவான்!
ஆனா இதை எதையும் ஒரு பொண்ணு செஞ்சிட்டா ஒப்பாரி ஓலமிடுவான்.
வலியும் கொண்டாட்டமும் பால் பேதம் பார்ப்பதில்லை!
பால்பேதம் பார்ப்பவர்க்கு வலியும் தெரியாது,கொண்டாடவும் தெரியாது!

உண்மைய சொன்னேங்க...! -1

எத்தனைபேர் நட்ட குழி அப்படின்னு எழுதினா ...ப்ப்அப்பா ! பட்டினத்தார் அனுபவிச்சு பாடிருக்காரும்ப்பாங்க!
பெண் தன் வலிய இப்படியான வார்த்தைகளில் எழுதினா ...பாஸு!எங்கயோ அனுபவிச்சு எழுதியிருக்கா ம்பாய்ங்க!

கற்றுக்கொண்டவை --1

உன்னைக் கண்டு பயம் என்றால் அதுக்கு மரியாதை என்று அர்த்தம் கொள்ளாதே!
உன் பலவீனம் அறியும்போது நான் பலமாகிவிட்டேன் என்று அர்த்தம்!
உன் மீது மரியாதை என்றால் அதுக்கு பயம் என்று அர்த்தம் கொள்ளாதே!
உன் பலம் அறியும்போது நானும் பலமாக வேண்டும் என்றே அர்த்தம்!