Friday, November 13, 2015

சந்திப்பு

தேவனுடனான சாத்தானின் சந்திப்பு இப்படியாகத்தான் இருந்தது.
"நீ எப்படி உன்னுடைய நியாயக்காரனின் வேண்டுதலையும்,அநியாயக்காரனின் வேண்டுதலையும் ஒன்றாகவே பாவிக்கிறாய்?"-இது சாத்தான்!
"ஆம்..!ஒரு கண்ணில் சுண்ணாம்பும் ஒரு கண்ணில் வெண்ணையும் வைக்கும் வழக்கம இல்லை!"-இது தேவன்!
"இந்த இருவரின் ஒரே மாதிரியான வேண்டுகோளை எப்படி ஒரேஅளவு கோலால் அளப்பாய்?"
"நியாயக்காரனுக்கு அதற்கான தகுதியைக் கொடுப்பேன்.அநியாயக்காரனுக்கு கொடுத்தபின் தகுதியை உயர்த்திக்கொள்கிறானா என்று பார்ப்பேன்.தகுதியால் அடைந்தவனை அரவனைத்துகொள்வேன்...தகுதியற்றவனை உயர்த்திப் பிடிப்பேன்..!
"ஏன்?"
"பிறர் பார்க்க அவன் மூக்கை அறுக்க அந்த உயரம் தேவை ! -சொல்லி புன்னகைத்தான் தேவன்!

-------------------------------------------------------------------------------------------------------------------------------
நியாயக்காரனுடனான அநியாயக்காரனது சந்திப்பு இப்படியாகத்தான் இருந்தது.
"உனக்கு தேவனுடனான நம்பிக்கை எப்படி வந்தது?"-இது அநியாயக்காரன்!
"நம்பிக்கை இருந்ததாலேயேதான் வேண்டுதல் வைத்தேன்! நீ எப்படி இவ்விசயத்தில்?"-இது நியாயக்காரன்!
"வேண்டுதல் பலித்ததால் நம்பிக்கை வந்தது...விரும்பியது பறி போனதால் நம்பிக்கை இழந்தேன்..."
"கொடுக்கிறவனுக்கு எடுக்கவும் உரிமை உண்டல்லவா?"
"புரியவில்லையே? "
"ஆண்டவரே ! இவர்கள் செய்வது இன்னதென்று அறியாது இருக்கிறார்கள்! இவர்களை மன்னியும்!
-------------------------------------------------------------------------
இது மதம் சார்ந்த பதிவல்ல..! இதில் அல்லாஹ் என்றோ,காளி என்றோ ஏன் பொருத்தமான இடங்களில் நானும் நீயும் என்று கூட எழுதி படித்து பார்த்துக் கொள்ளலாம்!

No comments:

Post a Comment