Wednesday, December 23, 2015

புனையப்படும் வரலாறு !

                                                               சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் அமையப்பெற்றுள்ள  அருள்மிகு மீனாட்சியம்மன் சொக்கநாதர் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா நடைபெற்றது.விழாவில் கலந்து கொண்ட அந்நாளைய சட்டமன்ற சபாநாயகரும், ஆன்மீகஈடுபாடு உடையவருமான மறைந்த திரு.P.T.R.பழனிவேல்ராஜன் அவர்கள் அப்போது சொற்பொழிவாற்றும் போது சொன்ன விஷயங்களில் ஒன்று திருமங்கலம் என்று ஊருக்கு பெய்ர்க்காரணம்! அவர் கூறியது  இது தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் போது மீனாட்சியம்மன் திருமணத்துக்கு தாலி செய்து கொடுத்த ஊர் என்பதால் இந்த ஊருக்கு திருமாங்கல்யம் என்ற பெயராகி,மருவி திருமங்கலம் என்றானது !
                                                            ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு முன்பு வரை யாரும் திருமங்கலம் என்ற ஊருக்கு அந்த பெயர் வந்த காரணம் இது என்று யாரும் சொன்னதில்லை!சொன்னவர் சபாநாயகர் என்பதால் இந்த கருத்து வலுப்படுத்தப்பட்டு வருகிறது இன்று வரை!
                                                           பலதலைமுறைகளாய் இவ்வூரில் குடியிருக்கும் பலரிடம் பேசிப்பார்த்ததில் யாருமிப்படி ஒரு பின்னணி இருப்பதாக சொல்லவில்லை .சொன்னவர்களும் சபாநாயகர்சொல்லிதான் தெரியும் என்றார்களே தவிர அவர்களின் முன்னோர்கள் சொல்லவில்லை என்றே சொன்னார்கள்! எந்தவொரு ஆவணங்களோ,அரசு தஸ்தாவேஜுகளோ அல்லது செப்பேடுகளோ இந்த ஊருக்கான பெயர்க்காரணத்தைஇது வரை சொல்லியதில்லை.அதற்கு மாறாக தொடர்ந்து இந்த செய்தியை அழுத்தி பரப்புவதன் காரணம் புரியவில்லை!
                                                           தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்பெயர்களை ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சி மணவர்கள் குடி, பட்டி, ஏந்தல், ஏடு, பாக்கம், ஏரி, கரை,குளம் மற்றும் மங்கலம் இப்படி முடியும் ஊர் பெயர்களுக்கு காரணம் கண்டு எழுதி வருகின்றனர்.இதில் மங்கலம் (மங்களம் அல்ல) என்று முடியும் ஊர்களுக்கு அர்த்தம் அரசனால் பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம்  மங்கலம் என்பதாம்!நான்கு வேதங்கள் அறிந்த பிராமணனுக்கு கொடுத்த நிலம் சதுர்வேதிமங்கலம் ,3வேதங்கள அறிந்த் பிராமணனுக்கு கொடுத்த நிலம் திரிவேதி மங்கலம்,2 வேதங்கள் அறிந்த் பிராமணனுக்கு கொடுத்த நிலம் துவிவேதி மங்கலம், பட்டர்களுக்கு கொடுத்த நிலம் பட்டமங்கலம்,வேதம் ஓத மட்டும் தெரிந்த பிராமணனுக்கு கொடுத்த நிலம் திருமங்கலம் என்பதே லாஜிக்காக இருக்கிறது.
                                             
                                           
                                                                                                                                                               திருமங்கலம் P.K.N. ஆண்கள் மேல்நிலைபள்ளியிலிருந்து 1968ல் வெளி வந்த் பள்ளியின்  வைரவிழா மலரில் 38,39-ம் பக்கங்களில் அப்போதைய தமிழாசிரியர் திரு. ஆதி.பாலசுந்தரன் அவர்கள் திருமங்கலம் என்ற தலைப்பில் எழுதிய கட்டூரையில் மேற்கானும்  கருத்தை ஒட்டிய செய்தியை உள்ளடக்கி எழுதியுள்ளார்..அதில் எந்த இடத்திலும் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் வழங்கியதாக செய்தி இல்லை!!
                         

   
                                  
     
                                               இதனை முழு ஆதாரமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எமது  எண்ணமில்லை. ஆனால் புனையப்படும் வரலாறு குறித்த சிறு கவலையே!நமக்கு தேவை ஆதாரமே யன்றி கற்பனை சுவையல்ல!
-மலர் தந்து உதவிய  பிகேஎன் பள்ளி நிர்வாகத்துக்கு நன்றி 

No comments:

Post a Comment