About Me

My photo
பாலகிருஷ்ணன் பரமசிவம் ஆகிய நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் வாசி, சமூகத்தின் ஒரு அங்கமென்பதால் என்னைப்பற்றியும் ,எமது ஊர் பற்றியும், எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை பகிரும் தளம் என இந்த Blogspot ஐ உபயோகிக்க விரும்புகிறேன்.

Saturday, August 1, 2015

போதி மரம் -1

-அண்ணாச்சி! சாப்டாச்சா?
-ஓ...சாப்டாச்சே!
-அப்புறம்,..வேற..
-வேறென்ன,அண்ணாச்சி! பொண்ணு ,மாப்புள புடிச்சு போச்சு,பொண்ணுக்கு பூ வைச்சாச்சு, இனி யென்ன எனக்கு உண்டான கமிசன் தான் .ரூ 4000/- கொடுத்தா வேலை முடிஞ்சுது!
-ஏய், என்னப்பா..நீ என்ன வேலை பாத்த கமிசன் கேக்குறதுக்கு?வெறும் பேப்பரு போன் நம்பர் தான...கொடுத்த...
-அப்படில்லாம் சொல்லாதீங்க அண்ணாச்சி,எனக்கு இதுதான் தொழிலு!
-சரி,.சரி ..ரெண்டு ரூபா தரச்சொல்றேன்,நாளைக்கு கடையில கணக்கு பிள்ளைகிட்ட போயி வாங்கிக்க!
-என்னங்க இப்படி சொல்ரீங்க!
-ரொம்ப வளவள-ங்காத..குடுக்கிறதை வாங்கிட்டு போ!
-சரி..நீங்க சாப்டீங்களா அண்ணாச்சி!
-எங்கயா! வந்த விருந்தாளிகளை கவனிச்சு அனுப்பவே நேரம் சரியா இருக்கு,இனிமே தான் பந்தியில போய் உட்காரனும்!
-சாப்பாடு சூப்பரா இருந்துச்சு அண்ணாச்சி!
-சும்மாவ்லே ஒரு இலை சாப்பாடு ரூ150-லெ!
-உங்களுக்கு தெரியுமா அண்ணாச்சி மேல பந்தில சாப்பிட ஆள் இல்லை! எப்படியும் 100 பேர் சாப்பாடு மிச்சமுன்னு சமையக்காரன் சொல்லுரான்,அதாவது ரூ15000- வேஸ்ட்.!
-என்ன செய்றது.. சில நேரம் எதிர்பார்த்த ஆள் வர்லைன்னா இப்படித்தான்.
-ரூ 15000-ங்கிறது என் குடும்பத்துக்கு 3 மாச செலவுங்க.!ஆனா நான் உங்ககிட்ட கேட்டது 4000/தாங்க!
-சப்.சப்.சப்!

No comments:

Post a Comment