அவள் அழுக்கடைந்த வெள்ளையாய் இருந்தாள்.நிறைமாத கர்ப்பிணியாய் ததும்ப,ததும்ப மெல்ல நடைபயின்றாள்.அவளது வால் ஒட்ட துண்டிக்கப்பட்டிருந்தது.சிறுவயதில் வளர்ப்புக்கு எடுக்கப்பட்டு பின் ஏதோ காரணத்தால் கைவிடப்பட்டவளாயிருக்ககூடும்.சுற்றும் முற்றும் பார்த்தபடியே வாயில் கவ்விய காய்ந்த,சற்றே பெரிய ரொட்டித்துண்டை கீழே விழாமல் ,எதிரிகள் பார்த்துவிடாமல் கவனமாய் வந்தாள்!பக்கத்து வீட்டுதிண்ணையின் பக்கவாட்டிலே மண்ணை முன்னங்கால்களால் பறித்து, ரொட்டியை கவனமாய் உள்ளே வைத்து மூக்கினால் மண்ணைச் சமப்படுத்தி,சிறுகல்லை நகர்த்தி அடையாளப்படுத்திக்கொன்டாள்!யாருக்கு?அவளுக்கா?இல்லை ...இரண்டொரு நாளில் ஈன்று வளர்த்தெடுக்கபோகும் தன் குட்டிகளுக்கா?நாய்களிடம் இப்படி உணவை பாதுகாத்துவைக்கும் மனோபாவம் உண்டா?சுமார் 10 வருடங்களாக நாட்டு நாய்களை வளர்த்த எனக்கு புதிராகவே இருக்கிறது!
No comments:
Post a Comment